Skip to main content

சொல்லாத காதல்


எத்தனை முறை கேட்டிருப்பேன் 

என்னை நேசிக்கிறாயா என்று;

எத்தனை முறை அலைந்திருப்பேன்

ஒரு முறையேனும் சொன்னாயா

உன் நேசத்தை;

காலத்தின் கொடுங்காற்று

நம்மை எதிரெதிரே எறிந்தது;

இரண்டு மகாமகம் கழித்து 

இரவு நேர ரயில் பயணத்தில் 

எதிர்பாராமல் சந்தித்தோம்;

நேரெதிரே இருந்தும் கூட 

மவுனம் மட்டுமே நம் பாஷையானது;

சிலர் வாழ்க்கையில் 

விளையாட்டு வினையாகும்; 

நம் வாழ்க்கையில் 

விதியே விளையாடியது;

நள்ளிரவு கடந்தும் 

கண்கள் மூட மறுத்தது;

ரயிலின் சப்தத்தைவிட 

உன் இதயத்துடிப்பின் ஓசைதான் 

அதிகமாய் கேட்டது;

இது நாள் வரை புரியாமல் இருந்த புதிருக்கு 

அன்று விடை கிடைத்தது;

நீயும் என்னை காதலித்ததை 

காலம் கடந்து உணர வைத்தது;

Comments

FEEDBACK

Name

Email *

Message *