உன்னை நான் முதன்முதலில் பார்த்த போது என்னை நான் மறந்தேன் ஒரு நொடியில்; உன்னுடன் பேசும் போது என் இதயத்தை இழந்தேன்; உன் மேல் காதல் கொண்டு என் வாழ்க்கை நீ தான் என்றதால் உறவுகளின் நன்மதிப்பை இழந்தேன்; என் அம்மாவிடம் நீ தான் என் காதலி என்று சொன்னதால் அம்மாவின் அன்பை இழந்தேன்; உன் மீது அன்பு, பாசம், காதல் வைத்ததால், உடன்பிறப்புகளின் உறவினை இழந்தேன்; உன்னையே நினைத்துக் கொண்டு இருந்ததால், என் உணர்வுகளை இழந்தேன்; ஊண், உறக்கம் இழந்தேன்; உன்னையே மனதில் சுமந்து திரிந்ததால் குடும்ப சுமையை இழந்தேன்; நீ என் இதயத்தை தினம் தினம் நோகடிப்பதால் என் பசியினை இழந்தேன்; நீ என் வகுப்பறையில் இல்லாததால் என் படிப்பை இழந்தேன்; உ ன க்காக காத்திருந்து காத்திருந்து என் வாழ்நாளை இழந்தேன்; உன்னை தினம் பார்க்க வேண்டும் ஆனால், பார்வை இருந்தும், பார்வை இழந்துள்ளேன்; ஆனால், நீயோ உயிரை இழக்கச் சொல்கிறாய்; ...