Skip to main content

Posts

Showing posts from July, 2011

அன்பே..!

பெண்ணே ! ஓன்று நீ பேசு; இல்லை உன் கண்கள் பேசட்டும்; ஒரே நேரத்தில் இரண்டுமே பேசினால்  நான் எப்படி கேட்பது; மூன்றாம் கண்ணால் பரமசிவம் செய்ததை  நீ உன் கடைக் கண்களால் செய்து விடுகிறாயே; என்ன முழிக்கிறாய்; நீ என்னை சுட்டெரிப்பதைத் தான் சொல்கிறேன்;

காதல் விழுங்கல்

காதலைப் பற்றி என்ன  வேண்டுமானாலும் கூறிடலாம்; ஆயிரம் அர்த்தங்கள்  பொதிந்து கிடப்பது என்னவோ தோல்வியடைந்த காதலில் மட்டும் தான்; விடுபட்ட அர்த்தம் கோடிக்கணக்கில்; பேசாத மொழிகள் இல்லை; தீண்டாத  விழிகள் இல்லை; இருந்தும் சில இதயங்கள் காதலை விழுங்கி விடுகின்றன;

காதல் பழமொழி

அன்பே என்னை மறப்பதற்காவது என் நினைவுகளை ஞாபகம்  வைத்துக்கொள்.! தோல்விதான் வெற்றிக்கு முதல்படி; காதலுக்கு பொருந்தாது இந்த பழமொழி..!

காதல்

நிலவில்  மனிதன்  காலடி  வைத்தது அதிசயமில்லை; காதலில் காலடி வைப்பது  தான் அதிசயம்; மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கப்படும் புதிய கண்டுபிடிப்பு; காதல்..!

கட்டணம்

என்னுள் உன்னைத்  தொலைத்துவிடு; கண்டுபிடித்துக் கொடுப்பதற்குக் கட்டணமாக என்னையே தருகிறேன்...!

தயக்கம்

நேற்றுவரை என்னிடம் தயக்கம் இல்லாமல் யோசிக்காமல் பேசியவள், இன்று ஒரு வார்த்தை பேசுவதற்கும் யோசித்து யோசித்து, தயங்கித் தயங்கி தான் பேசுகிறாள் நான் சொன்ன ஒற்றை  வார்த்தையால்; நீ  சொல்லாமலேயே இருந்திருக்கலாம்   " நான் உன்னை காதலிக்கிறேன் " என்று;

என் நிழல்

நீ என் இதயம் என்று சொல்ல மாட்டேன்; ஏன் என்றால் இதயம் கூட ஒரு நாள் நின்று விடும் என்பதால்; நீ என் மூச்சுக் காற்று என்றும் சொல்ல மாட்டேன்; ஏன் என்றால் மூச்சுக் கூட ஒரு நாள் நின்று விடும் என்பதால்; நீ என் உயிர் என்றும் சொல்ல மாட்டேன்; ஏன் என்றால் உயிரும் ஒரு நாள் பிரிந்து விடும் என்பதால்; நீ என் கண் என்றும் சொல்ல மாட்டேன்; ஏன் என்றால் கண் கூட ஒரு நாள் மங்கி விடும் என்பதால்; நீ என் முடி என்று கூட சொல்ல மாட்டேன்; ஏன் என்றால் முடி கூட ஒரு நாள் உதிர்ந்து விடும் என்பதால்; நீ என் இரத்தம் என்று கூட சொல்ல மாட்டேன்; ஏன் என்றால் இரத்தமும் ஒரு நாள் சிந்திவிடும் என்பதால்; ஆனால் , உன்னை என் நிழல் என்பேன்; ஏன் என்றால், நிழல் மட்டும் தான் இறுதி வரை என் கூடவே இருக்கும். உன்னால் என் வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் கிடைத்து விட்டது.

FEEDBACK

Name

Email *

Message *