Skip to main content

Posts

Showing posts from September, 2011

குழந்தைகள் பிறந்தவுடன் அழுவது ஏன் !

இ ந்த தகவலை வாசிக்கும் ஒவ்வொருவரின் பார்வையிலும், இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுது கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. சரி அப்படி எதற்குத் தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன? இதோ தெரிந்து கொள்ளுங்கள்.  ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும் பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள்  கேட்டு கேட்டு மெய் மறந்து, அந்த இதயத் துடிப்பின் இசையில்  பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம்.  இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால் தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம். அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக் கொள்ளும் பொழுது குழந்தை  மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

நீ வர வேண்டும்

வசந்தம்  தென்றலுக்காக  காத்திருகிறது  நான் உனக்காக  காத்திருக்கிறேன்  வசந்தமாக இல்லை  உன்னவனாக  நீதான் என் வசந்தம்  நீதான் என் தென்றல்  நீ வரவேண்டும் 

கோபப்படும் பொழுது சத்தமாக பேசுவது ஏன்

இருவரும் ஒருவருக்கு ஒருவர் கோபப்படும் பொழுதோ, சண்டை இட்டுக் கொள்ளும் பொழுதோ, அவர்களின் இதயங்களுக்கு இடையே தூரம் அதிகமாகி விடுகிறது. இந்த தொலைவின் காரணமாக, ஒருவர் சொல்வது மற்றொருவரை சென்றடைய அதிக சத்தமாக பேச வேண்டியிருக்கிறது. எந்த அளவிற்கு கோபம் அதிகம் இருக்கிறதோ அந்த அளவிற்கு சத்தமாக பேச வேண்டியிருக்கிறது. அதேபோல் ஒருவருக்கு ஒருவர் மிகுந்த அன்புடன் இருக்கும் பொழுதோ அவர்கள் பேசுவது மற்றவர்களுக்கு கேட்பதில்லை. அவ்வளவு மென்மையாக சப்தம் இல்லாமல் பேசிக் கொள்ள காரணம் இதயங்களுக்கு இடையே மிகக் குறைந்த தூரம். இன்னும் சொல்லப்போனால் காதலர்களின் இதயங்கள் இணைந்தமையால் அங்கே வார்த்தை தேவையில்லை அல்லது வருவதில்லை.

மெய் பிம்பங்கள்

உண்மையை காட்டும் கண்ணாடியே  நீயும் சத்திய சோதனை படித்தாயோ ?  என்னை நீ காட்டுகிறாய்  தன்மைச் சற்றும் மாறாமல்  ஒப்பனை செய்துப் பார்க்கையிலே  ஒய்யாரமாய் என்னைக் காட்டுகிறாய்  கோபப்பட்டு நான் வந்தால்  சீற்றமாகக் காட்டுகிறாய்  புன்முறுவலுடன் நான் நின்றால்  தன்மையாகச் சிரிக்கின்றாய்  என் சுட்டு விரலை நீட்டினால்  எனையே குறித்துக் காட்டுகிறாய்  கனிந்து உருகி நான் நின்றால்  கசிந்து உருகி எனை நோக்குகிறாய்  சோகப் பட்டு கண்ணீர் சிந்தையிலே  நீயும் என்னுடன் அழுகின்றாய்  என் உண்மை நிலையை காட்டுகிறாய்  என் உணர்வுகளை பிரதிபலிக்கிறாய்  உடைந்துச் சிதறி கிடந்தாலும்  ஒவ்வொரு துண்டிலும் எனை காட்டுகிறாய்  உடையும் பொருளே ஆனாலும்  உயர்ந்த கருத்தை உணர்த்துகிறாய்  நம் சிந்தையும் செயலும் எப்படியோ  நம் வாழ்வும் அமையும் அப்படியே !

எய்ட்ஸ்

பண்பாடுப் பயிற்றுவிக்கும்  பயமுறுத்தல் நோய்  எய்ட்ஸ்  ஒழுக்கத்தைப் பொதுவாக்குவோம்  இரு பாலருக்கும்  வராது எய்ட்ஸ்  மருந்து இல்லை  மரணம் உறுதி  எய்ட்ஸ்  உயிரை உருக்கும்  உடலைக் கெடுக்கும்  எய்ட்ஸ்  கவனம் தேவை  குருதி பெறுகையில்  எய்ட்ஸ்  எச்சரிக்கை  ஊசி போடுகையில்  எய்ட்ஸ்  வருமுன் காப்போம்  உயிர்க் கொல்லிநோய்  உணர்ந்திடுவோம்  சபலத்தின் சம்பளம்  சலனத்தின் தண்டனை  எய்ட்ஸ்  சில நிமிட மகிழ்வால்  பல வருடங்கள் இழப்பு  எய்ட்ஸ்  வெறுக்க வேண்டாம்  நேசிப்போம் நண்பராக  எய்ட்ஸ் நோயாளிகளை 

நிறத்தை வைத்து குணத்தைக் கண்டுபிடிக்கலாம்

நி றத்தைவைத்து குணத்தைக் கண்டுபிடிக்கலாம்' - இது  தான் கலர் ஜோதிடத்தின் கான்செப்ட். 'உங்களுக்குப் பிடித்த கலரைச்  சொல்லுங்கள். உங்களைப் பற்றிச் சொல்லுகிறோம்' என்று சிலர்  கிளம்பியிருக்கிறார்கள். இதோ அவர்களின் கலர்ஃபுல் ஜோதிடம். வெள்ளை :   நீங்கள் இளமை விரும்பிகள் எதிலும்  பெர்ஃபெக்ஷனை எதிர்பார்ப்பீர்கள். ஆனால், அது நடக்காது. ஆழம் பார்த்துக்  கால் விடும் கல்லுளிமங்கன்ஸ். அதனால், சீக்கிரம் ஏமாறமாட்டீர்கள்.  பிடிக்கும் என்பதற்காக அடிக்கடி வெள்ளை ஆடை களை அணியாதீர்கள். ஏனெனில், மழை பெய்து ஊரே சகதியாகக் கிடக்கிறது!  சிவப்பு ரொம்பவே ஆக்டிவ் பார்ட்டி. நத்தை கூட மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். இந்த கலர் பிடித்த ஆண்களுக்கு ஒரே மாதிரியான வாழ்க்கை என்றாலே கசப்பு. (மனைவிகள் கவனிக்க!) அதிக மன வலிமை இருக்கும். அதுதான் பலமும் பலவீனமும்!  பிங்க்   :        சிவப்பின் மென்மைக் குணமே பிங்க். சரியான  சுய நலச் சுனாமிகள். எப்போதும் தன்னை யாராவது கவனித்துக் கொள்ள வேண்டும்  என்று எதிர் பார்ப்பார்கள். ...

காதலை உறுதியாக மறுத்து விடுங்கள்

காத‌லி‌ப்ப‌தி‌ல் எ‌வ்வளவு உறு‌தி வே‌ண்டுமோ அதை விட காதலை மறு‌ப்ப‌திலு‌ம் உறு‌தியாக இரு‌க்க வே‌ண்டு‌ம். அது தா‌ன் இருவரது வா‌ழ்‌க்கையையுமே ந‌ல்ல முறை‌யி‌ல் கா‌ப்பா‌ற்ற உதவு‌ம். ஒரு இளைஞன் ஒரு பெண்ணிடம் வந்து தனது காதலை சொல்லும் போது அதற்கு மூன்று பதில்கள் இருக்கலாம். எந்த பதிலாக இருந்தாலும், உடனடியாக அந்த இளைஞனிடம் அதனை உறுதியாக சொல்லி விடுவது நல்லது. அது என்ன மூன்று பதில்கள்.  ஒன்றாவது: ஆம், நானும் உங்களை காதலிக்கிறேன்,  இர‌ண்டாவது: எனக்கு யோ‌சி‌க்க கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்,  மூன்றாவது: இல்லை. எனக்கு உங்கள் மீது காதல் இல்லை என்பது தான். முதல் மற்றும் இரண்டாம் பதில்களுக்கு பெரும்பாலும் ஆம் என்ற ஒரே அர்த்தம் தான் வரும். அதாவது காதலிக்கிறேன், நன்கு யோசித்து சொல்கிறேன் என்றால், யோசிக்கும் இடத்தில் அவர் இருக்கிறார் என்று தானே அர்த்தம். அப்படி யோசித்து இல்லை என்றாலும் அதை உடனடியாக கூறி விட வேண்டும். ஆனால் இல்லை என்ற பதிலை உடனடியாக கூறி விடுவது ஒருவரின் வாழ்க்கையையேக் காப்பாற்றும். ஒரு இளைஞனை காதலிக்க முடியாது என்ற பட்சத்தில், அவரிடம் உங்களை காதலிக்க முடியாது என்று மறுத்து வ...

என்ன சொல்ல காதலியே?

நீ இன்றி  என்னால் வாழ முடியாது என்று சொல்லி  இறந்து  போக ஆசை தான்  என்ன செய்வது  கல்லறை கேட்குமே என்னிடம் ! என் இதயம் எங்கே என்று  என்ன சொல்ல காதலியே?  என் கல்லறைக்கு ?..... 

தந்து விட்டேன் உன்னிடம்

என் இதயத்தை  தந்துவிட்டேன் உன்னிடம்  நான் இறந்தும்  என் உயிர் வாழ்கிறது  இந்த மண்ணிடம்

கண்ணீர் தந்து போகிறாய்

அன்று கருணையோடு  காதல் தந்தாய்  இன்று  கனவு ஒன்று  கலைந்தது என்று  கண்ணீர் தந்து போகிறாய்

அன்பின் அர்த்தம்

நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டுகள் வாழ்வதைவிட.... உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார்... அன்பின் அர்த்தம் புரியும் !.

இதயத்தில் வலி

டீக்கடை பெஞ்சில்_ கையில் மாலை நேர செய்தித்தாள் சுற்றி நண்பர்களின் அரட்டையாய்... பனிக்காற்று மெல்ல எனை வருடி... எள்ளி நகையாட.... தலை நிமிர்ந்தேன் என் முன்னாள் காதலி... தன் கணவனோடு கைகோர்த்து... நடை பயின்றாள்... என் மனதில்... இதயத்தில் வலி எடுக்க....

என் காதலிக்காக

எல்லாவற்றிலும் எனக்குப் பிடித்ததையே நீ தேர்ந்தெடுத்தாய்; உனக்குப் பிடித்ததையே நான் தேர்ந்தெடுத்தேன்; அதனால் தான்.....! காதல் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது இது என்  காதலிக்காக;

பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க

சூழ்நிலைக்கேற்ப அனுசரிக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதற்காக உங்கள் நோக்கத்தைக் கைவிட வேண்டியதில்லை. வெளிப்படையாகப் பேசுங்கள். ஆனால் முரட்டுத்தனம் வேண்டாம். துணிவுடன் இருங்கள். ஆனால், எதிர்ப்புணர்வைக் காட்டாதீர்கள். தொடர்ந்து கடுமையாக உழையுங்கள். விட்டு விட்டு உழைப்பதில் பலனில்லை. ஏதாவது ஒன்றில் விசேஷமான திறமை பெறுங்கள். அதற்காக உங்களை குறுக்கிக் கொண்டு தெளிவை  இழக்க வேண்டியதில்லை. எழுத்திலும் பேச்சிலும் திறமையினை வளர்த்துக் கொள்ளுங்கள். வெறும் வார்த்தை ஜாலங்களில் ஈடுபடாதீர்கள். அடிப்படைகளையும் விவரங்களையும் தனித் தனியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். செயலுக்குத் திட்டமிடுங்கள். அதே சமயம் விவரங்களை அலட்சியப் படுத்தாதீர்கள். மனித இனத்தில் நம்பிக்கை வையுங்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள். ஏமாளியாகவோ, தலை கர்வத்துடனோ இருக்காதீர்கள். மனதில் சித்திரம் உருவாக்கி முன் கூட்டியே திட்டமிடுங்கள். உடனடியான எதிர்காலத்தை மறந்து நீண்ட எதிர் காலத்திற்குத் திட்டமிடாதீர்கள். மரியாதைக் குறைவினையோ, வெறுப்பையோ வளர்த்துக் கொள்ளாதீர்கள். வேலையை நேசியுங்கள். அதுவே முழு திருப்தியை அளிக்கும். முயற்சியை வளர்த்துக் கொள்...

பெண்களே நீங்களும் பின்பற்றலாமே

ஒவ்வொரு, பெண்களின் வாழ்க்கையிலும் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்துவது திருமணம்! அன்றைய நாளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி அற்புதமான ஆலோசனைகள். திருமண நேரத்தில் எல்லோரின் பார்வையும் மணப் பெண்ணையே மையமாகக் கொண்டிருப்பதால் பெண்மைக்கே உரிய நாணம் அவளைத் தலை குனிய வைத்து விடும். இது போன்ற சூழலில் மணப்பெண் தனது தன்னம்பிக்கையை ஒரு போதும் தளர விட்டு விடக் கூடாது. சில பெண்கள் பயத்தில் மண மேடையிலேயே கண்ணீர் உதிர்த்த படி இருக்கிறார்கள்.  மகிழ்ச்சியான நாளில் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் தேவை. அப்போது தான் அன்று  எடுக்கப்படும் போட்டோ, வீடியோ காமிராவில் மிக அழகாக காட்சி அளிப்பீர்கள். அதுபோல திருமணத்தின் போது மணப் பெண்கள் புடவை கட்டுவதில் கவனமாக இருக்க வேண்டும்.  பட்டுப் புடவையானது அதிகம் தூக்கலாகவோ, தொங்கலாகவோ இருக்கக்கூடாது. மணமேடையை நோக்கி நடக்கும் போது மிகவும் மெதுவாக அடியெடுத்து வைக்க வேண்டும். குறிப்பாக படிக்கட்டில் ஏறும் போது கவனமாக இருப்பது நல்லது. வழக்கம் போல் அங்கும் இங்கும் பார்வையைச் சிதற விடாமல் கீழே கவனமாக பார்த்து அடியெடுத்து  வைக்க வேண்டும் . உங்கள...

பொய்

காதலித்து  கைவிட்டதற்குப்  பதிலாக  காதலிக்கவில்லையென  நீ  பொய்யே சொல்லியிருக்கலாம்

FEEDBACK

Name

Email *

Message *