Skip to main content

கோபப்படும் பொழுது சத்தமாக பேசுவது ஏன்


இருவரும் ஒருவருக்கு ஒருவர் கோபப்படும் பொழுதோ, சண்டை இட்டுக் கொள்ளும் பொழுதோ, அவர்களின் இதயங்களுக்கு இடையே தூரம் அதிகமாகி விடுகிறது. இந்த தொலைவின் காரணமாக, ஒருவர் சொல்வது மற்றொருவரை சென்றடைய அதிக சத்தமாக பேச வேண்டியிருக்கிறது.

எந்த அளவிற்கு கோபம் அதிகம் இருக்கிறதோ அந்த அளவிற்கு சத்தமாக பேச வேண்டியிருக்கிறது.

அதேபோல் ஒருவருக்கு ஒருவர் மிகுந்த அன்புடன் இருக்கும் பொழுதோ அவர்கள் பேசுவது மற்றவர்களுக்கு கேட்பதில்லை. அவ்வளவு மென்மையாக சப்தம் இல்லாமல் பேசிக் கொள்ள காரணம் இதயங்களுக்கு இடையே மிகக் குறைந்த தூரம்.

இன்னும் சொல்லப்போனால் காதலர்களின் இதயங்கள் இணைந்தமையால் அங்கே வார்த்தை தேவையில்லை அல்லது வருவதில்லை.

Comments

FEEDBACK

Name

Email *

Message *