Skip to main content

விவசாயி மகன் எழுதிய கண்கலங்க வைக்கும் கடிதம்


மண்வெட்டி பிடித்தவனை மாப்பிள்ளையாக 

சமுதாயம் மறுக்கிறது;

விவசாயி என சொல்லிக் கொண்டு 

பெண் பார்க்க முடியவில்லை;

எதிர் காலத்தில் எதை உண்ணுமோ 

இந்த சமுதாயம் எனக்கு தெரியவில்லை;

திருமணத்தில் நான் விளைவித்த 

பொருட்கள் மட்டும் வேண்டும் என்றார்கள்;

மணமேடைக்கு மண் கறை படிந்த 

என்னை வேண்டாம் என்றார்கள்;

எந்த நேரத்திலும் வெளுக்காத என் விவசாயம் 

திருமண நேரத்தில் வெளுத்து போனதே சாயம்;

இது என்றுமே என் மனதில ஆறாத காயம்;

விளைவித்தவன்

பிச்சைகாரன்!

விலை வைத்தவன்

இலட்சக்காரன்!

இரண்டு கோடிகள் கொடுத்து

ஒரு ஜோடி நாய்கள் வாங்கும்

எங்கள் தேசத்தில்!

இருபது கோடிகள் கொடுத்து

ஒருவர் மட்டுமே பயணிக்க

கார் வாங்கும் எங்கள் தேசத்தில்!

இருநூறு கோடிகள் கொடுத்து

கிரிக்கெட் அணியை ஏலமேடுக்கும்

எங்கள் தேசத்தில்!

இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய்

தள்ளுபடி செய்யும்

எங்கள் தேசத்தில்!

இருபதாயிரம் கோடிகளை

பொழுது போக்க ஒதுக்கும்

எங்கள் தேசத்தில்!

இரண்டு இலட்சம் கோடிகளுக்கு

அலைக்கற்றை ஏலமெடுக்கும்

எங்கள் தேசத்தில்!

எங்களையோ அல்லது நாங்கள் 

விளைவிக்கும் பொருளையோ 

ஏலமெடுக்கத் தான் எவருமில்லை;

இப்படிக்கு,

பட்டம் பெற்ற விவசாயி மகன்.

Comments

FEEDBACK

Name

Email *

Message *