அன்புள்ள காதலிக்கு,
ஆசையுடன் உன் காதலன் நான் எழுதும் கடிதம்;
என்னை என்று விட்டு சென்றாயோ..
அன்றே இழந்தேன் என் இன்பமெல்லாம்;
மீளா துயரில் துடிக்கிறேன்;
துவள்கிறேன்;
நீ எதையுமா உணராமல் இருக்கிறாய்?
என்ன? ஏது? என்று கேளாமல் எப்படி
உன்னால் இருக்க முடிகிறதோ
எனக்கே தெரியவில்லை......!!!
காலையில் எழுந்தால்,
கைப்பேசியில் உன் குறுந்தகவல்
காணாமல் திகைக்கிறேன்;
தினமும் தூக்கம் விளித்து
உண்ண மறக்கிறேன்;
மனதில் இருக்கும் உன் உருவம் நினைத்து
வயிற்றை நிறைத்துக் கொள்கிறேன்;
கல்லூரியில் வைத்து என் வகுப்பென்று எண்ணி
வேறு பிரிவில் சென்று கோமாளியாய்
ஏமாந்து நிற்கிறேன்;
மாலையில் வீட்டு டியூஷனில்
உன் பெயர் வைத்த பெண்ணின்
பெயரை அழைக்கும் போது
கண்கள் ஏனோ கலங்கத் தான் செய்கிறது;
அப்போது என் மனம் கட்டுப்பாட்டை இழந்து துள்ளி எழும்;
ஆனால் பல்லைக் கடித்து அடக்க வேண்டியதாய் உள்ளது;
உன்னை மறக்கத் தான் நினைக்கிறேன்;
ஆனால் தோற்று போகிறேன்;
புத்தகத்தை எடுத்து படிக்கலாம் என்று திறந்தால்;
எழுத்து எல்லாம் உன் முகமாய் இருந்தால்;
கவலையுடன் புத்தகத்தை மூடி வைப்பேன்;
எழுத்து எல்லாம் உன் உருவமாய் வந்து
சித்திரவதை செய்யும்;
சரி,
படிக்கத் தான் முடியவில்லை
நண்பர்களுடன் வெளியே ஊர் சுற்ற சென்றாலும்
வழிக் கடைகளில் உன் பெயர் வைத்த பலகைகள்
என்னுயிரைக் கொல்லும்;
தூங்காத இரவுகளாய் என் கண்கள் பனிக்கிறது;
நான் என்ன செய்ய?
நீ திரும்பி வருவாயா? மாட்டாயா?
இப்படிக்கு
உன் நினைவில் வாழும்
உன்னால் வெறுத்து ஒதுக்கப்பட்ட
ஓர் இலைச் சருகு.

Comments