Skip to main content

Posts

அன்புள்ள காதலிக்கு

அன்புள்ள காதலிக்கு, ஆசையுடன் உன் காதலன் நான் எழுதும் கடிதம்; என்னை என்று விட்டு சென்றாயோ.. அன்றே இழந்தேன் என் இன்பமெல்லாம்; மீளா துயரில் துடிக்கிறேன்;  துவள்கிறேன்; நீ எதையுமா உணராமல் இருக்கிறாய்? என்ன? ஏது? என்று கேளாமல் எப்படி  உன்னால் இருக்க முடிகிறதோ  எனக்கே தெரியவில்லை......!!! காலையில் எழுந்தால், கைப்பேசியில் உன் குறுந்தகவல்  காணாமல் திகைக்கிறேன்; தினமும் தூக்கம் விளித்து  உண்ண மறக்கிறேன்; மனதில் இருக்கும் உன் உருவம் நினைத்து  வயிற்றை நிறைத்துக் கொள்கிறேன்; கல்லூரியில் வைத்து என் வகுப்பென்று எண்ணி  வேறு பிரிவில் சென்று கோமாளியாய்  ஏமாந்து நிற்கிறேன்; மாலையில் வீட்டு டியூஷனில்  உன் பெயர் வைத்த பெண்ணின்  பெயரை அழைக்கும் போது  கண்கள் ஏனோ கலங்கத் தான் செய்கிறது; அப்போது என் மனம் கட்டுப்பாட்டை இழந்து துள்ளி எழும்; ஆனால் பல்லைக் கடித்து அடக்க வேண்டியதாய் உள்ளது; உன்னை மறக்கத் தான் நினைக்கிறேன்; ஆனால் தோற்று போகிறேன்; புத்தகத்தை எடுத்து படிக்கலாம் என்று திறந்தால்; எழுத்து எல்லாம் உன் முகமாய் இருந்தால்; கவலையுடன் புத்தகத்தை மூடி வைப்ப...
Recent posts

PAYMENT

GOOGLE PAY jackbrawin@oksbi Mobile No: 7094905125 PAYMENT STRAIGHT THROUGH BANK NAME: BRAWIN Y.J ACCOUNT NUMBER: 39230100005518 IFSC: BARB0KUZHIT BRANCH: KUZHITHURAI BANK OF BARODA PAYTM 7094905125

சொல்லாத காதல்

எத்தனை முறை கேட்டிருப்பேன்  என்னை நேசிக்கிறாயா என்று; எத்தனை முறை அலைந்திருப்பேன் ஒரு முறையேனும் சொன்னாயா உன் நேசத்தை; காலத்தின் கொடுங்காற்று நம்மை எதிரெதிரே எறிந்தது; இரண்டு மகாமகம் கழித்து  இரவு நேர ரயில் பயணத்தில்  எதிர்பாராமல் சந்தித்தோம்; நேரெதிரே இருந்தும் கூட  மவுனம் மட்டுமே நம் பாஷையானது; சிலர் வாழ்க்கையில்  விளையாட்டு வினையாகும்;  நம் வாழ்க்கையில்  விதியே விளையாடியது; நள்ளிரவு கடந்தும்  கண்கள் மூட மறுத்தது; ரயிலின் சப்தத்தைவிட  உன் இதயத்துடிப்பின் ஓசைதான்  அதிகமாய் கேட்டது; இது நாள் வரை புரியாமல் இருந்த புதிருக்கு  அன்று விடை கிடைத்தது; நீயும் என்னை காதலித்ததை  காலம் கடந்து உணர வைத்தது;

விவசாயி மகன் எழுதிய கண்கலங்க வைக்கும் கடிதம்

மண்வெட்டி பிடித்தவனை மாப்பிள்ளையாக  சமுதாயம் மறுக்கிறது; விவசாயி என சொல்லிக் கொண்டு  பெண் பார்க்க முடியவில்லை; எதிர் காலத்தில் எதை உண்ணுமோ  இந்த சமுதாயம் எனக்கு தெரியவில்லை; திருமணத்தில் நான் விளைவித்த  பொருட்கள் மட்டும் வேண்டும் என்றார்கள்; மணமேடைக்கு மண் கறை படிந்த  என்னை வேண்டாம் என்றார்கள்; எந்த நேரத்திலும் வெளுக்காத என் விவசாயம்  திருமண நேரத்தில் வெளுத்து போனதே சாயம்; இது என்றுமே என் மனதில ஆறாத காயம்; விளைவித்தவன் பிச்சைகாரன்! விலை வைத்தவன் இலட்சக்காரன்! இரண்டு கோடிகள் கொடுத்து ஒரு ஜோடி நாய்கள் வாங்கும் எங்கள் தேசத்தில்! இருபது கோடிகள் கொடுத்து ஒருவர் மட்டுமே பயணிக்க கார் வாங்கும் எங்கள் தேசத்தில்! இருநூறு கோடிகள் கொடுத்து கிரிக்கெட் அணியை ஏலமேடுக்கும் எங்கள் தேசத்தில்! இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய் தள்ளுபடி செய்யும் எங்கள் தேசத்தில்! இருபதாயிரம் கோடிகளை பொழுது போக்க ஒதுக்கும் எங்கள் தேசத்தில்! இரண்டு இலட்சம் கோடிகளுக்கு அலைக்கற்றை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்! எங்களையோ அல்லது நாங்கள்  விளைவிக்கும் பொருளையோ  ஏலமெடுக்கத் தான் எவருமில்லை; இ...

பூமி என்னும் சொர்க்கம்: டைனோசர்கள் அழிந்தது ஏன்?

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா என்ற சூப்பர் கண்டம் இருந்தது. உலகின் எல்லா கண்டங்களும் ஒன்றாகச் சேர்ந்து இருந்ததால் அதற்கு சூப்பர் கண்டம் என்று பெயர். அந்த சூப்பர் கண்டத்தில் டைனோசர்கள் வாழ்ந்தன . அது மனிதன் தோன்றாத காலம். அப்போது டைனோசர்கள்தான் உலகில் ஆதிக்கம் செலுத்தின . டைனோசர் என்றால் ’ பயங்கரமான பற்களைக் கொண்ட பல்லி’ என்று அர்த்தம். இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் ஓவன் 1842-ம் ஆண்டில் அந்தப் பெயரை வைத்தார். ஆனால் அது பொருந்தாத பெயர் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் டைனோசர்களில் கோழிக்குஞ்சு அளவு டைனோசரும் இருந்தது. 100 அடி நீள டைனோசரும் இருந்தது. தாவரங்களை உண்ணும் டைனோசர்களும் இருந்தன . விலங்குகளை வேட்டையாடி உண்ணும் டைனோசர்களும் இருந்தன . எப்போதோ இறந்து போன டைனோசர்களின் புதை படிவங்களை வைத்துதான் விஞ்ஞானிகள் நிறையத் தகவல்களைச் சேகரித்து வைத்துள்ளனர். டைனோசர்களின் தலை, கால் போன்ற உறுப்புகளின் புதை படிவங்கள் நிறையவே கிடைத்துள்ளன . அபூர்வமாக டைனோசரின் முழு எலும்புக்கூடு கிடைத்துள்ளது. தமிழகத்திலும் டைனோச்ர்கள் இருந்துள்ளன . ஒரு வகை டைனோசருக்குத் திராவிடோசாரஸ் என்று ...

காதல் பிரிவு

நீ பிரிந்து சென்றதற்காக ஒருபோதும் அழுதவன் இல்லையடி நான்; ஆனால், நம் காதலை புரிந்து கொள்ளாமல்  பிரிந்து சென்றாயே என்று தான்  கலங்கித் தவிக்கிறேன்;

நீ , நான், நாம்

வெண்பிறையே ...!!!  நிலாமுகமே....!!!  சாய்ந்து அசைந்தாடும் முல்லை ச்  சுடரே....!!!  முத்தமிழும் சங்கமிடும் தமி ழ்க்  கூற்றே....!!!  நினைக்கிறேன்  உனையே தினமும்....!!! கிடைக்குமா இதயத்தில் புகலிடம்....!!!  "நீ" ,"நான்"  எனும்  ஒருமையில் இருப்பதை,  "நாம்" எனும் பன்மையாய் அமைக்க  தருவாயா இதயத்தில் அகலிடம்....!!!  நீ வேண்டாம் என்றதும் மடியவே  தமிழன்னையை சாட்சி வைத்து  அவள்  பாத மடியில்  காத்திருக்கிறேன்  முடிவில்லா  ஆசையில்...... !!!!!

FEEDBACK

Name

Email *

Message *