அன்புள்ள காதலிக்கு, ஆசையுடன் உன் காதலன் நான் எழுதும் கடிதம்; என்னை என்று விட்டு சென்றாயோ.. அன்றே இழந்தேன் என் இன்பமெல்லாம்; மீளா துயரில் துடிக்கிறேன்; துவள்கிறேன்; நீ எதையுமா உணராமல் இருக்கிறாய்? என்ன? ஏது? என்று கேளாமல் எப்படி உன்னால் இருக்க முடிகிறதோ எனக்கே தெரியவில்லை......!!! காலையில் எழுந்தால், கைப்பேசியில் உன் குறுந்தகவல் காணாமல் திகைக்கிறேன்; தினமும் தூக்கம் விளித்து உண்ண மறக்கிறேன்; மனதில் இருக்கும் உன் உருவம் நினைத்து வயிற்றை நிறைத்துக் கொள்கிறேன்; கல்லூரியில் வைத்து என் வகுப்பென்று எண்ணி வேறு பிரிவில் சென்று கோமாளியாய் ஏமாந்து நிற்கிறேன்; மாலையில் வீட்டு டியூஷனில் உன் பெயர் வைத்த பெண்ணின் பெயரை அழைக்கும் போது கண்கள் ஏனோ கலங்கத் தான் செய்கிறது; அப்போது என் மனம் கட்டுப்பாட்டை இழந்து துள்ளி எழும்; ஆனால் பல்லைக் கடித்து அடக்க வேண்டியதாய் உள்ளது; உன்னை மறக்கத் தான் நினைக்கிறேன்; ஆனால் தோற்று போகிறேன்; புத்தகத்தை எடுத்து படிக்கலாம் என்று திறந்தால்; எழுத்து எல்லாம் உன் முகமாய் இருந்தால்; கவலையுடன் புத்தகத்தை மூடி வைப்ப...